Categories
சினிமா தமிழ் சினிமா

அவதூறு பேச்சு…. கனல் கண்ணன் தலைமறைவு…. தயார் நிலையில் போலீசார்……!!!!!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் திரைப்பட ஸ்டண்ட்  மாஸ்டர் கனல் கண்ணன் பேசியுள்ளார். அப்போது அவர் பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே கனல் கண்ணன் பெரியார் பற்றி அவதூறாக பேசும் வீடியோ காட்சி கடந்து இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கனல் கண்ணன் பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சைபர் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கனல்  கண்ணன் பெரியார் பற்றி அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் கடல் கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கனல் கண்ணணை  விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் கனல் கண்ணன் திடீரென தலைமறைவாகி இருக்கின்றார். இந்த நிலையில் கனல் கண்ணனை கைது செய்வதற்காக மதுரவாயிலில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்கின்றனர். இதில் கனல் கண்ணன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.

Categories

Tech |