Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவதியடைந்து வந்த பெயிண்டர்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயபாலன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவதியடைந்து வந்துள்ளார். இதனால் ஜெயபாலன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ஜெயபாலன் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஜெயபாலனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மோகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |