ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களான சிவப்பு மண்டலங்களில் தொடர்ந்து ஊரடங்கு பாதிப்பை குறைப்பதற்காக கடுமையாக்கப்பட்டு தான் வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் சிவப்பு மண்டலங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு தற்போது அமுலில் இருக்கும் சூழ்நிலையில், ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களை பெறுவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஜூன் மாதத்திற்கான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட இலவச உணவு பொருட்களை ரேஷன் கடைகளில் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.