கொள்கை அரசுகளை அணுக திராணியில்லாமல் அதிமுக கூட்டணி வன்முறையை தூண்டுவதாக திருமாவளவன் குற்றம் சாற்றிடியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உருவப்படத்திற்கு திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா தடுப்பூசி மருந்து அனைவருக்கும் கிடைக்க மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றார்.
தோல்வி பயத்தின் காரணமாக அதிமுக கூட்டணி கட்சியினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வருவதாக திருமாவளவன் குற்றம் சாற்றினார். தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார். வாக்கு இயந்திரங்களை கடத்தி செல்வதற்கும் ஆளுங்கட்சியினர் திட்டமிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.