அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரணி கிராமத்தில் வீராச்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசி சென்றனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.