Categories
மாநில செய்திகள்

அழகு நிலையங்கள், முடி திருத்த கடைகள் செயல்பட தடை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு போது தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையம் இயங்க தடை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. முக்கிய வணிக காரணம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக கூறியுள்ளது.

Categories

Tech |