அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கோடீஸ்வர ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபல உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கோடீஸ்வர ராவ் அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கோடீஸ்வர ராவ் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
இதனால் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோடீஸ்வர ராவ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.