நூற்பாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டியில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த தீவிபத்தில் நூற்பாலையில் இருந்த எந்திரங்கள் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.