அமெரிக்க நாட்டு தூதரகம், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயமும் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம். இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட தயாராகுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க குடிமக்களை இந்த வார தொடக்கத்திலிருந்து உக்ரைனுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.