அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதற்கிடையே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுத்தது.
இந்நிலையில் அலங்காநல்லூர் விழா குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆலோசனை நடத்தினார்.. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16க்கு பதில் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அதற்கு அடுத்த நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.