Categories
மாநில செய்திகள்

அறிவித்த 2 வாரத்தில்…. அமலுக்கு வரும் குழந்தைகளுக்கான திட்டம்… முதல்வர் சரவெடி…!!!!

தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்காக ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் மு.க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மே 7-ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் விதமாக குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமொன்று அமல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அதனை செயல்படுத்தும் விதமாக இந்த புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும். இதன்மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |