அறந்தாங்கி அருகே ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றவிடாமல் தடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எல்.என்.புறத்தில் இருக்கும் செல்வவிநாயகர் கோயில் இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கோவிலின் அறங்காவலர்கள் அம்மையப்பன், கண்ணன் உள்ளிட்டோர் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் அருகில் ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களில் அப்புறப்படுத்த அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்துக்கு இந்து அறநிலையத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதன்பேரில் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் பொதுமக்களும் இணைந்து போராட்டத்தில் பாக்கேற்றனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றாமல் சென்றனர். இச்சம்பவத்தால் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீஸார்.