கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உழவர் சந்தை முன்பு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு கோட்டம் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை 2 கோடியே 21 லட்சம் மதிப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கோவை மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக 63 நகர் நல மையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் வளர்ச்சி அடைய முதல்வர் இந்த சிறப்புத் திட்டத்தை வழங்கியுள்ளார். இன்று ஒரு நாளில் மட்டும் 113 கோடியே 27 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள், நகர்நல கட்டிட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.கோவை விமான நிலைய விரிவாக்கத்தை பொருத்தவரை 1132 கோடி ரூபாய் நிதிகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
வரலாற்றிலேயே முதன்முறையாக முதலமைச்சரே அமர்ந்து தொழில் முனைவோரின் கோரிக்கைகளை கேட்டார். மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டம் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாறும்” என தெரிவித்தார். தொடர்ந்து அண்ணாமலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக கேள்வி கேட்கிறார் என விமர்சித்தார்.