Categories
தேனி மாவட்ட செய்திகள்

அருவிக்கு சென்ற வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அருவில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியை அடுத்துள்ள பொட்டல்பட்டியில் பிரபு(26) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம் உப்புத்துறையில் உள்ள யானைக்கஜம் அருவில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அருவில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து பிரபு மற்றும் அவரது நண்பர்கள் அருவிக்கு கீழே தடாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து கொண்டிருந்தபோது பிரபு திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் பிரபுவை மீட்பதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடமலைக்குண்டு காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |