Categories
மாநில செய்திகள்

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2001-2002 ஆம் கல்வி ஆண்டு மூன்றாவது செமஸ்டர் முதல் தற்போது வரை அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பலரும் பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்போது மீண்டும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பை வழங்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி 2001 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரில் இருந்து, 2003கல்வியாண்டின் முதல் செமஸ்டரில் இருந்தும் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான நடைமுறை மற்றும் தேர்வு மையம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வு கட்டணத்துடன் 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 3 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |