Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அரசு விதித்த கட்டுப்பாடு…. சிரமத்தினால் குவிந்த லோடுகள்…. விலை சரிந்த பல்லாரி….!!

நெல்லையில் பல்லாரி வரத்து அதிகமானதால் அதனுடைய விலைமதிப்பு குறைந்து காணப்படுகிறது.

நெல்லை டவுனிலிருக்கும் நயினார்குளத்தில் மொத்த மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தென்காசி, நெல்லை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலிருந்தும் கூட காய்கறிகள் வருவது வழக்கம். இவ்வாறு வருகின்ற காய்கறிகளை சில்லரை வியாபாரிகள் வாங்கிக்கொண்டு பொதுமக்களிடம் விற்பனை செய்கின்றனர்.

இதற்கிடையே தற்போது கொரோனாவின் பரவலை முன்னிட்டு இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்குகள் லாரியின் மூலம் நெல்லைக்கு வருவதற்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் மராட்டியத்திலிருந்து நெல்லைக்கு மொத்தமாக பல்லாரி கொண்டுவரப்பட்டுள்ளன. வரத்து அதிகரிப்பின் காரணமாக பல்லாரி விலை வெகுவாக குறைந்தது.

Categories

Tech |