சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் மணலி பகுதியில் உள்ள மத்திய அரசினுடைய பெட்ரோலிய நிறுவனமான சி.பி.சி.எல் சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த முகாமிற்கு சி.பி.சி.எல் நிர்வாக இயக்குனரான அரவிந்த் குமார் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் இலவச கண் பரிசோதனை முகாமை எம்.பி கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதில் தனியார் கண் மருத்துவமனையின் 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை பரிசோதனை செய்துள்ளனர். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் தேவையானவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடியும் இலவச அறுவை சிகிச்சையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.