Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

அரசு முத்திரையுடன் போலியான சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த முதியவர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் சிலர் அரசு துறை ஆவணங்களை அரசு முத்திரையுடன் போலியாக தயாரித்து, நிலம் தொடர்பான ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடியாக பத்திர பதிவு செய்து பணம் சம்பாதிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரில் வசிக்கும் வின்சென்ட்(85) என்பவரும் சத்யபுரத்தைச் சேர்ந்த பினு(41) என்பவரும் இணைந்து பட்டா, ஜாதி சான்றிதழ், இறப்பு, பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதித்து வந்தனர். மேலும் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முக்கிய முத்திரைகளை அவர்கள் போலியாக தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வின்சென்ட், மற்றும் பினு ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |