Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் பலி…!!

செய்யாறு பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பலியானதால் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம் ,புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின்  மனைவி வினித்ராவிற்கு அரசு மருத்துவமனையில் 2வதாக அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது .தொடர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்த நிலையில் வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு வினித்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது .

தவறான சிகிச்சையே அவரது உயிர் இழப்பிற்கு காரணம் என்று அவரது உறவினர்கள் மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து அங்கு வந்த போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து  மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Categories

Tech |