Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் பணி – உத்தரவு செல்லும்

மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணி புரிய வேண்டும் என்று உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை உள்ளது. இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 276 மருத்துவ மாணவ மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த தனி நீதிபதி மாணவ மாணவிகள் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர்களின் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கு  அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும் என்றும். இரண்டு ஆண்டுகள் பணி முடித்த பிறகு சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் என்றும் தீர்ப்பளித்துள்ளனர். அதே சமயம் இரண்டு ஆண்டுகளுக்குள் பணி வழங்க முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |