அரசு பேருந்துக்குள் தெருநாய்கள் உறங்குவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூருக்கு அரசு போக்குவரத்து கழக நிலையிலிருந்து பந்தலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் காலை மதியம் மாலை என மூன்று நேரங்களில் கொளப்பள்ளிக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு இரவில் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும்.
இந்நிலையில் கொலை பள்ளி பயணிகள் நிழற்குடை அருகே நிறுத்தி வைக்கப்படும் அரசு பேருந்தில் கண்டக்டர், டிரைவர் பஸ்ஸிலிருந்து இறங்கிச் சென்ற பிறகு அங்கிருக்கும் தெரு நாய்கள் பஸ்ஸில் ஏறி படுத்து உறங்குகின்றது. மேலும் அசுத்தம் செய்து விடுகின்றது. இதனால் கண்டக்டர், டிரைவர், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் கதவுகள் கொண்ட அரசு பேருந்தை இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுத்து விடுத்திருக்கின்றனர்.