சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தங்கள் உணவகங்களில் அரசு பேருந்து நிற்க வேண்டுமென விண்ணப்பிக்கும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது. அந்த புதிய பட்டியலில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்ற அரசு போக்குவரத்து கழக அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அசைவ உணவுகளையும் சாப்பிட விரும்புவார்கள் என்பதால் புதிய அறிவிப்பில் இத்தகைய மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.