Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் தானியங்கி பயண சீட்டு….. விரைவில் அறிமுகம்…..!!!!

அரசு பேருந்துகளில் விரைவில் தானியங்கி பயண சீட்டு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற பயணிகளுக்கு காகித பயண சீட்டு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய அரசு பேருந்து கழகங்களில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சர்வதேச ஒப்பந்தப்பு புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டதாகவும், இந்த தானியங்கி பயணச்சீட்டு முறை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இப்படி தானியங்கி முறையில் தேசிய பொது பயண அட்டை, க்யூ ஆர் கோடு ஆகியவை மூலம் பயண சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |