Categories
மாநில செய்திகள்

“அரசு பேருந்துகளில் இனி இலவசமாக”….. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி…..!!!!!

தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம் டிரைவர், கண்டக்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதில் நாடக கலைஞர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகையும், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது 50% பயண கட்டண சலுகை பெற முடியும்.

அவர் எடுத்துச் செல்லும் இசைக்கருவிகள் மற்றும் தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதாவது தப்பாட்டம், மாடு, மயில், காவடி, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கொல்லிக்கட்டை, நையாண்டி, மேளம், நாதஸ்வரம், பம்பை, உறுமி, உடுக்கை, ஆர்மோனியம், தபேலம், மிருதங்கம், தவில் மற்றும் சிறிய அளவிலான கருவிகளையும் இலவசமாக எடுத்துச் செல்ல முடியும். இந்த இலவச பயணத்தை மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை, விழுப்புரம், சேலம் ஆகிய பேருந்துகளில் அனுமதித்து உத்தரவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு நாட்டுப்புற கலைஞர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |