Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில் 93,445 பேர் சேர்க்கை….. சென்னை மாநகராட்சி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 93,445 பேர் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் கடந்த மாதம் 14ஆம் தேதி சேர்க்கை தொடங்கிய நிலையில் இதுவரை 93,445 பேர் சேர்ந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளில் இருந்து 12,471 பேர் அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர். இப்பள்ளிகளில் மேலும் இரண்டு மாதங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |