தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி,மத்திய, மாநில அரசு பணிகளுக்கான எழுத்து தேர்வுகளை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருமண நிகழ்வில் 50 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை தொடரும் என்றும், பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.