Categories
மாநில செய்திகள்

அரசு சின்னங்கள்…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக கூறி சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு தொடரப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்பரசும் வழக்கு தொடர்ந்த முகுந்த்சந்த் போத்ரா மறைந்துவிட்ட நிலையில், இந்த வழக்கை போத்ரா மகன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவ்வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது .

அப்போது தேசிய சின்னங்கள் பெயர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் அதிகாரிகளிடம் அக்கறையில்லை. அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு சின்னங்களை பயன்படுத்தலாம். ஆனால் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகளுக்கு காவலர்கள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனையை டிஜிபி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |