அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையில் கடந்த இரண்டு நாட்களாக தரை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவை கொடுத்து வந்த தனியார் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் அரசு கேபிள் டிவி சேவையில் தனியார் நிறுவனம் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக இருந்த புகார் தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாகி ராஜன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.