தமிழகத்தில் கடந்த 20ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி, +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அறிவிப்பு வெளியான நாள் முதல் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3,89,969 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 2,86,564 விண்ணப்பங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.