Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மாநில அரசின் செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

டெல்லியில் சுலப மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் காற்று மாசு எப்போதும்  அதிகரித்து காணப்படும். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் புறநகர் பகுதிகளில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காற்று மாசை குறைப்பதற்காக மின்சார வாகன பயன்பாட்டை டெல்லி அரசுக்கு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் சுலப மாத தவணையில் மின்சாரம் வழங்கும் திட்டம் டெல்லி அரசு ஊழியர்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. டெல்லி அரசு ஊழியர்கள் தங்கள் துறை மூலமாக மின்சார இரு சக்கர வாகனங்களை வாங்கி கொள்ளலாம். இதற்கான தொகை மாத சம்பளத்தில் இருந்து சுலப மாத தவணையில் கழித்துக் கொள்ளப்படும். இந்த திட்டத்திற்காக சி.இ.எஸ்.எல்.  என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்பட டெல்லி அரசு திட்டமிட்டிருக்கிறது.

மின்சார வாகன சார்ச் ஏற்றும் நிலையங்களையும்சி.இ.எஸ்.எல். அமைக்கும்.  மேலும் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களை மூன்றில் இரண்டு பங்கு இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. எனவே இரு சக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றினால் காற்று மாசை கணிசமாக குறைக்க முடியும் என கருதப்படுகிறது.  இதேபோல் மின்சாரம் சைக்கிள் வாங்குபவர்களுக்கு 5,500 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கும் என மற்றொரு திட்டத்தையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |