Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்?…. விரைவில் வெளியாகபோகும் உத்தரவு….!!!!

புதுவை காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். காரில் பயணிப்போர் சீட்பெலட் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையிலுள்ள அனைத்து பிரிவினருக்கும் தலைமையக கண்காணிப்பாளர் அனுப்பியுள்ள உத்தரவில் “போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள், ஊர்க் காவல் படையினர் அனைவரும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். அதுமட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருப்போரும் ஹெல்மெட் அணியவேண்டும்.

4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட்பெல்ட் அணியவேண்டும். இதனை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். புதுவையில் குறைந்த வயது உடையவர்கள் அதிகளவில் வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். இந்த வருடம் கடந்த ஆகஸ்ட் வரை 82 பேர் இருசக்கர வாகனவிபத்தில் இறந்துள்ளனர். இவற்றில் 63 பேர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இருசக்கர வாகனங்களை ஓட்டும் சிறுவர்களை காவல்துறையினர் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோர் ஹெல்மெட் அணியும்படியும் புதுவை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் முதலில் காவல்துறையில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் புதுவை மாநில மக்களுக்கு முன் மாதிரியாக திகழவேண்டும் என்பதற்காக அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது. இதற்குரிய உத்தரவுகள் விரைவில் துறை வாரியாக வெளியாகவுள்ளது. அதன்பின் புதுவை மக்களிடையே ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்து இருக்கிறது.

Categories

Tech |