அரசு ஊழியர்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்தில் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை செட்டில்மெண்ட் என இரண்டு ஜாக்பாட் அறிவிப்புகளுக்கான மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி -ஜூன், ஜூலை-டிசம்பர் என ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டில் பணவீக்கம் பயங்கர வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. அதனால் அரசு ஊழியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கம் தற்போது மிகுதியாக இருப்பதால் ஜூலை மாதம் அகவிலைப்படி 4% உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நெருக்கடி காலத்தில் வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை அதாவது 18 மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை இரண்டும் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் பார்த்திருக்கிறார்கள்.