Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மீண்டும் அடுத்த மாதம் வீட்டு வாடகை படி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 17 சதவீத அகவிலைப்படி 11 சதவீதம் அதிகரித்து 28% சதவீதமாக வழங்கப்படுகின்றது. அதன் பின் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்த்தப்பட்டு 31 சதவீதம் அதிகரித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு தகவல்களை வெளியிட்டு வருகின்றது. அதன்படி அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வருகிற ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப் படி உயர்த்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |