மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு பரிசாக அமைந்தது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் அகலவில்லை நிவாரணமும் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் உயர்த்தப்படாது என அரசு தெரிவித்தது. அது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த அரசு திட்டம் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதரி அண்மையில் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் உயரும். அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்படும் என்பதைத் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக மொத்த அகவிலைப்படி 34 விழுக்காடாக உயரும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.