Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…..  கூட்டுறவு துறை செம சூப்பர் அறிவிப்பு….!!!! 

தொடக்க கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு 7 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது .

கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் செயலர், கணக்கர், எழுத்தாளர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.  அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணயமானது கடந்த 2016ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. 5 ஆண்டு முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதுதொடர்பாக பரிசீலிக்க கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அதனடிப்படையில் புது ஊதியம் நிர்ணயம் செய்யுமாறு மண்டல இணைப்பதிவாளர் கூட்டுறவுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.  தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வும், நஷ்டத்தில் செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் செயல்படும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு திட்டம் போன்றவற்றையும் செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |