இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலக நாடுகளின் உதவியை அந்நாடு கோரி வருகிறது. அதன்படி, இந்தியாவில் இருந்து கடன் உதவி, அத்தியாவசிய பொருட்களை மத்திய அரசு அனுப்பி வருகிறது. தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை கப்பல் மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் நாளை வேலைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோலை சேமிக்கும் விதமாக அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் மே 20ஆம் தேதி (இன்று) வேலைக்கு வரவேண்டாம் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கேட்டுக் கொண்டுள்ளார்.