புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையின் சிடிஸ்கேன் அறையின் சிமெண்ட் மேற்கூரை இன்று பிற்பகல் திடீரென்று இடிந்து விழுந்ததால், அதன் கீழேயிருந்த குளிரூட்டப்பட்ட அறைக்கான தர்மாகோல் மேற்கூரை சிடி ஸ்கேன் மேல் இடிந்து விழுந்தது.
இந்நிலையில் சிடி ஸ்கேன் அருகில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள், அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதற்கிடையில் சிடி ஸ்கேன் அறையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.