புதுச்சேரியில் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவருக்கு அவரது உறவினர்கள் பட்டாசு வெடித்தும், பேண்ட் வாத்தியம் இசைக்க ஊர்வலத்துடன் அழைத்து வந்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜேந்திரன்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு, அவரது உறவினர்கள் பலர், வரவேற்பு கொடுப்பதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து ரெயின்போ நகரில் இருந்து ராஜேந்திரன் வீடு வரை அவரது உறவினர்கள் பட்டாசு வெடித்தும், பேண்ட் வாத்தியம் இசைக்க ஊர்வலமாக அழைத்துச் சென்று வரவேற்றனர்.