நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் போன்ற பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. விதிகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி அபராதம் விதித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது.கல்குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிகளை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து நோட்டீஸ் தரலாம் என்று தெரிவித்துள்ளது.
Categories
அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படலாம் – மதுரை ஐகோர்ட்..!!
