Categories
மாநில செய்திகள்

அரசாணை எண் 115 திரும்ப பெறுங்கள்….. திமுக அரசிற்கு எச்சரிக்கை விடுத்த டிடிவி தினகரன்….!!!!

தமிழக அரசு வேலைக்காக முயற்சி செய்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப் போடுகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்த இளைஞர்களின் கனவில் மண்ண அள்ளி போடும் விதமாக திமுக அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. அரசு காலி பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி பணியில் உள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார் மய்யமாக்க திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதனை தொடர்ந்து அரசு இயந்திரத்தின் மூளையாக செயல்பட்டு அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் தனியார் வசம் போய்விடாதா? சற்றேக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்கு சமமாகும். புரட்சித்தலைவரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட திமுகவின் போலி திராவிட மாடல் அதை தான் செய்ய விரும்புகிறதா?. இதனையடுத்து தமிழ்நாட்டில் இளைஞர்களின் அரசு வேலை கனவை குழி தோண்டி புதைக்கும் திமுக அரசின் அரசாணை எண் 115 உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அரசு ஊழியர்கள் இளைஞர் சக்தி மற்றும் பொது மக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |