உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான் பூரில் ராம்லீலா நாடகத்தின் போது சிவன் வேடத்தில் நடித்த கலைஞர் ராம் பிரசாத் என்பவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் நன்றாக நடனமாடிக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த கலைஞர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மேடையில் கீழே சரியும் வரை நடனமாடி இருக்கிறார். நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது மேடையிலேயே நடன கலைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.