இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு துபாய் மற்றும் அமீரகத்தில் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் செல்வர். இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பயணத்திற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். இந்த அறிவிப்பு “அபுதாபி விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளுக்கு கிடையாது. அபுதாபி அரசு துறை வழிகாட்டுதல் அடிப்படையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும் பயணிகள் அபுதாபி மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்துள்ள முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.