Categories
உலக செய்திகள்

“அம்மா ஸ்மார்ட் போன் வாங்கி தாங்க”…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்…. பெரும் அதிர்ச்சி…!!!!!!

வீடியோ கேம் விளையாடுவதற்கு ஸ்மார்ட் போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பப்ஜி கேம் விளையாடும் சிறுவர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சில ஆபத்துகளும் ஏற்படுகிறது மாவட்டத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி அலி ஜாயின் எனும் சிறுவன் தனது தாயார் 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளான். அந்த பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவன் விரக்தி அடைந்துள்ளான். விளையாட்டில் வருவது போல துப்பாக்கியால் சுத்த பின் அனைவரும் மீண்டும் வருவார்கள் என நினைத்து அவர்களை சுற்றி இருக்கின்றான் என போலீசார் கூறியுள்ளனர் என தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்கு ஆபத்து விளைவிக்கின்ற பப்ஜி உள்ளிட்ட வீடியோ கேம்களுக்கு தடை விதிக்க பரிந்துரை அனுப்ப பாகிஸ்தான் போலீசார் முடிவு செய்து இருக்கின்றனர். இருந்த போதிலும் லாகூர் ஐகோர்ட் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கும் உத்தரவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் இதே போல் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் பஞ்சாப் மாகாணத்தில் போர்ட் அப்பாஸ் எனும் பகுதியில் நடைபெற்றுள்ளது. முகமது ஆதி என்னும் சிறுவன் பப்ஜி கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வத்தில் இருந்துள்ளான்.

இதனால் தனது பெற்றோரிடம் ஸ்மார்ட் போன் வாங்கி தரும்படி கேட்டு இருக்கின்றான். ஆனால் இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதுபோன்ற சிறுவயதிலே வீடியோ கேம் விளையாடுவதற்கு அடிமையாகிறது மற்றும் விளையாடுபவர்களின் உடல்நல பாதிப்பு ஏற்படுவது போன்றவற்றை கவனத்தில் கொண்டு பாகிஸ்தானில் 2020 ஆம் வருடம் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |