கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 6 மணி நேரத்தில் 24 முட்டையிட்ட கோழி ஒன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. அம்பலப்புழா பகுதியை சேர்ந்த பிஜுகுமார் 20க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் சின்னு என்ற கோழி நேற்று காலை 8.30 மணிக்கு முட்டையிட தொடங்கியது. அதன் பிறகு வரிசையாக 2 மணி வரை கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை அந்த கோழி இட்டது.
இந்த அதிசய கோழியை பார்வையிட ஊர் மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் திரண்டனர். அவர்களின் கண் எதிரே அந்த கோழி முட்டைகளை போட்டது. ஒரு கோழி ஆறு மணி நேரத்தில் 24 முட்டையிட்ட சம்பவம் அந்த ஊரில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.