மராட்டிய மாநிலத்தில் தொழிலதிபரின் மொபைல் போன் ஹேக்கிங் செய்து மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாய் அபேஸ் செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே நகரில் தொழிலதிபர் ஒருவரின் செல்போனை ஹேக்கிங் செய்து பண மோசடி நடைபெற்றுள்ளது. இது பற்றி வாக்லே எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி கூறிய போது, நவம்பர் 6 ,7-ம் தேதியில் தொழிலதிபரின் செல்போன் ஹேக்கிங் செய்யப்பட்டதன் மூலமாக அவரது வங்கி கணக்கில் இருந்து வேறொரு கணக்குக்கு நெட் பேங்கிங் மூலமாக ரூ.99.50 லட்சம் பணம் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.