Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அம்மாக்கு திதி கொடுக்கும் போது…! ஆத்தோடு போன மருத்துவர் உயிர்… காவேரி ஆற்றில் விபரீதம் …!!

திருச்சியில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள புள்ளம்பாடி என்ற அரசு மருத்துவமனையில் கிஷோர் பிரியதர்ஷன் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தன் மாமியாரின் அம்மாவிற்கு திதி கொடுப்பதற்காக இன்று காலையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது காவிரி ஆற்றிற்கு குளிப்பதற்காக சென்ற பிரியதர்ஷன் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பிரியதர்ஷனின் உடலை கைப்பற்றியதோடு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |