கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு தரப்பிலிருந்து பல்வேறு வகையான திட்டங்கள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டங்கள் அனைத்தும் இவர்களை சரியாக சென்று சேர்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களுடைய பணி நிலவரம் மற்றும் தொழிலாளர் நிலை குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் புதிய போர்டல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இ-ஷ்ரம் என்ற வெப்சைட்டை இன்று மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருடைய பணி விவரங்கள் அடங்கியிருக்கும். இதன் மூலமாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் நேரடியாக சென்று சேர இந்த திட்டம் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதில் 30 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1443 என்ற டோல் பிரீ எண் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வெப்சைட்டில் தொழிலாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும் இன்னும் பல அம்சங்களும் இருக்கின்றன.