தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்நிலையில் 42 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது. திமுக 30, அதிமுக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு பின்னடைவை சந்தித்து உள்ளார். குன்னூரில் திமுக வேட்பாளர், திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் வேலு முன்னிலை பெற்றுள்ளார். ஆரணி தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 3,903 வாக்குகள், திமுக வேட்பாளர் 3,037 வாக்குகள் பெற்றுள்ளனர்.