அமேசான் பிரைம் தின விற்பனையைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்காக, அந்நிறுவனம் ’அமேசான் ஃப்ரீடம் சேல்’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (ஆக. 8) தொடங்கி 11ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு இந்த விற்பனை நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் இந்தியா சார்பில் ’அமேசான் ஃப்ரீடம் சேல் 2020’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ’ஃப்ரீடம் சேல்’ விற்பனையானது அமேசானால் வருடந்தோறும் அறிவிக்கப்படும் ஒன்றாகும்.
முன்னதாக, அமேசான் பிரைம் தின விற்பனை, கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இந்தியாவில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்த அமேசான் பிரைம் தின விற்பனையானது வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதில், எச்டிஎப்சி வங்கி அட்டைகள் மூலம் பொருட்கள் வாங்கும்போது 10 விழுக்காடு கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம்.
இந்நிலையில், அமேசான் பிரைம் தின விற்பனையைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்காக அந்நிறுவனம் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இன்று (ஆக. 8) தொடங்கி 11ஆம் தேதி வரை பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
முன்னதாக பிரைம் தின விற்பனையானது பிரத்யேகமாக பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஃப்ரீடம் சேல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கைப்பேசிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இதில், எஸ்பிஐ அட்டை வைத்திருப்பவர்களுக்கு 10 விழுக்காடு உடனடி தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.