Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அதிபர் ஜோ பைடன்”… வரும் 24ஆம் தேதி ஆசிய பயணம்…. வெளியான தகவல்….!!!!

ஜோபைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் ஆசியநாடுகளுக்கு முதன் முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் உருவாக்கப்பட்டு உள்ள குவாட் எனும் நாற்கர கூட்டமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல இருக்கிறார்.

இதற்கு முன்பாக தென்கொரியா சென்ற அவர், அந்நாட்டு அதிபர் மற்றும் அதன்பின் ஜப்பான் பிரதமரை சந்தித்து பல முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார். அமெரிக்காவின் அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்ற பின் ஆசியநாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |